வெள்ளி, 25 அக்டோபர், 2013

தென்னாட்டுச் செல்வங்கள் - 10

நீலோத்பலாம்பாள் 



 திருவாரூரில் உள்ள நீலோத்பலாம்பிகை பேரில் திருவாரூர் “மும்மூர்த்தி”களில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதர் எட்டு “விபக்தி” ( வேற்றுமைத் தொகை )ப் பாடல்கள் இயற்றியுள்ளார். அதாவது, அம்பிகை, அம்பிகையை, அம்பிகையால்,அம்பிகைக்கு  ..என்று தொடங்கும் அழகான எட்டு ஸம்ஸ்கிருதப் பாடல்களை எட்டு விதக் ‘கௌள’ ராகங்களில் அமைத்திருக்கிறார். அவற்றில் ஒன்றை அண்மையில், இந்த ஆண்டு நவராத்திரி சமயத்தில் நான் கேட்க நேர்ந்தது. அப்போது ‘சில்பி’யின் நீலோத்பலாம்பிகைச் சித்திரமும், அதை விளக்கும் ‘தென்னாட்டுச் செல்வங்கள்’ கட்டுரையும் நினைவுக்கு வந்தன.

நீலோற்பலம் அல்லது கருங்குவளை மன்மதனின் பாணங்களில் ஒன்று அல்லவா? குவளை மலரைக் கையிலேந்திய அம்பிகையும் சிருங்கார ரசத்தை ஆளும் நாயகியே. யோகத்தை வலியுறுத்தும் தெய்வமாய்க் கமலாம்பிகை தவநிலையில் திருவாரூரில் இருப்பதுபோல், இல்லறமே நல்லறம் என்று அருளும் கோலத்தில் நீலோத்பலாம்பாள் ( அல்லியங்கோதை)  ஒரு தனிச் சன்னதியில் திருவாரூரில் காட்சி தருகிறாள். ஞான சக்தி கமலாம்பிகை; கிரியா சக்தி நீலோத்பலாம்பிகை.

அம்பிகையின் அண்மையில் ஒரு தோழி. தோழியின் தோளில் ஒரு குட்டி முருகன் ! முருகனின் சுட்டுவிரலைப் பிடித்தபடி அம்பிகை! ( மகன் தலையைத் தாய் தடவிக் கொடுப்பது போலும் சிற்பம் உள்ளது என்பர்.) இது ஒரு நூதனமான சிற்பப் படைப்பு, இல்லையா?

மேலும் , “ கவிஜனாதி மோதின்யாம்” ( கவிஞர்களை மகிழ்விப்பவள்) என்று தீக்ஷிதர் இந்த அம்பிகையைத் துதிக்கிறார் ஒரு பாடலில்! அப்போது எல்லாக் கவிஞர்களும் நிச்சயமாய் அந்தத் தேவியை --- ‘தேவனின் கட்டுரையில் உள்ள ‘சில்பி’யின் சித்திரம் மூலம் --  தரிசிக்க வேண்டாமா?





[ நன்றி : விகடன் ]

[  If you have trouble reading from an image, double click and read comfortably. Or right click on each such image and choose 'open image in a new tab' , Then in the new tab , and, if necessary, by using browser's  zoom facility to increase the image size also,  can read with comfort. One can also download each image to one's computer and then read with comfort using browser's zoom facility ]

தொடர்புள்ள பதிவுகள்:

தென்னாட்டுச் செல்வங்கள்

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அருமையான தகவல்கள். சேமித்துக் கொண்டேன்.

Malathi Jayaraman சொன்னது…

மிக அருமை, மிக்க நன்றி.